புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இது குறித்து காவல்துறையினருக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பகுதியில் திருட்டு மாடுகளை இறைச்சிக்காக கொலை பண்ணுதல், கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம் என்பன இடம்பெறுகின்றன.
மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்
மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்
பல தடவைகள் முறைப்பாடு
இது குறித்து குறிகட்டுவானில் இயங்கும் உப காவல் நிலையத்திற்கு பல தடவைகள் முறைப்பாடு செய்தும், அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
காவல்துறையினருக்கும், குறித்த குற்றச் செயல்களை செய்பவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
புங்குடுதீவு பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை | Various Crimes In The Pungudutivu Area
கசிப்பு வியாபாரத்தினால் மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது, பிள்ளைகளை தனியே பாடாசாலைக்கு அனுப்புவதற்கு பயமாக உள்ளது.
பெண்கள் வீதியில் தனியாக நடமாடுவதற்கு பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது எனவே இதற்கு உரிய அதிகாரிகள் ஒரு சிறந்த தீர்வு வழங்கு வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளனர்.